Monday, May 27, 2013


ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சம்ஸ்க்ருதப் பண்டிதர் ஒருவர் எனது நெருங்கிய நண்பர். சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் எழுதும் வல்லமை பெற்றவர். அவர் சொன்ன ஒரு நிகழ்ச்சி:

வெகு நாட்களுக்கு முன், தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் பெரியவாள் முகாமிட்டிருந்த சமயம். சந்த்ரமௌலீஸ்வரர் சன்னதியில் தீப நமஸ்காரங்கள் முடிந்ததும் அங்கு குழுமியிருந்த மாணவர்களை ராம நாமத்தையும், சிவ நாமத்தையும் சொல்லச் சொன்னார் பெரியவர். குறிப்பாக அவர் ஒரு மாணவனை அழைத்து ‘ராம ராமா’ ‘சிவ சிவா’ என்று சொல்லச் சொன்னபோது, சுற்றி இருந்தவர்கள் அப்பையனை பிறவி ஊமை என்றனர். ‘ அதனாலென்ன? பையன் சொல்லட்டும்’ என்று பெரியவாள் சொல்ல, பையன் ராம நாமத்தை சொல்ல ஆரம்பித்துவிட்டான் .

இதைக் கண்ட என் ஆந்திர நண்பர். “எந்த மகானை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாதோ, எந்த மகானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ அந்த சந்திரிகா மௌலீ ஆன என் குருநாதனை நமஸ்கரிக்கிறேன்” என்று சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் எழுதினார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், அதுவரை அவர் சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகமே எழுதியதில்லையாம்.

- டாக்டர்.ஆர்.வீழிநாதன் (மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் – ஆறாம் தொகுதியிலிருந்து )
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சம்ஸ்க்ருதப் பண்டிதர் ஒருவர் எனது நெருங்கிய நண்பர். சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் எழுதும் வல்லமை பெற்றவர். அவர் சொன்ன ஒரு நிகழ்ச்சி:

வெகு நாட்களுக்கு முன், தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் பெரியவாள் முகாமிட்டிருந்த சமயம். சந்த்ரமௌலீஸ்வரர் சன்னதியில் தீப நமஸ்காரங்கள் முடிந்ததும் அங்கு குழுமியிருந்த மாணவர்களை ராம நாமத்தையும், சிவ நாமத்தையும் சொல்லச் சொன்னார் பெரியவர். குறிப்பாக அவர் ஒரு மாணவனை அழைத்து ‘ராம ராமா’ ‘சிவ சிவா’ என்று சொல்லச் சொன்னபோது, சுற்றி இருந்தவர்கள் அப்பையனை பிறவி ஊமை என்றனர். ‘ அதனாலென்ன? பையன் சொல்லட்டும்’ என்று பெரியவாள் சொல்ல, பையன் ராம நாமத்தை சொல்ல ஆரம்பித்துவிட்டான் .

இதைக் கண்ட என் ஆந்திர நண்பர். “எந்த மகானை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாதோ, எந்த மகானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ அந்த சந்திரிகா மௌலீ ஆன என் குருநாதனை நமஸ்கரிக்கிறேன்” என்று சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் எழுதினார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், அதுவரை அவர் சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகமே எழுதியதில்லையாம்.

- டாக்டர்.ஆர்.வீழிநாதன் (மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் – ஆறாம் தொகுதியிலிருந்து )

Sunday, May 26, 2013

ஒருமுறை திருமதி M S ம் திரு சதாஸிவமும் கச்சேரிக்காக வெளிநாடு
சென்றுவிட்டு திரும்பியதும் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்கள். பூஜை
முடிந்து எல்லாருக்கும் தன் கையாலேயே தீர்த்தம் குடுத்துக்
கொண்டிருந்தார் பெரியவா. அந்த வரிசையில் சதாஸிவத்துக்கு பின்னால் திரு
ரா.கணபதி நின்று கொண்டிருந்தார்.

சாதாரணமாக கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணனுக்கு பெரியவா தன்
கையால் சந்திரமௌலீஸ்வரர் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்ர விரோதமாகையால்
சதாசிவத்துக்கு பெரியவா கையால் தீர்த்தம் கிடைக்காது என்பது ரா.கணபதிக்கு
நிதர்சனமாக தெரிந்திருந்தது. ஆனால், சதாசிவத்துக்கு இந்த விஷயம்
தெரியாதாகையால் ரொம்ப சந்தோஷமாக இவரோடு பேசிக்கொண்டே கியூவில் முன்னேறிக்
கொண்டிருந்தார்.

ரா.கணபதிக்கு ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. “பெரியவாளே கதி” என்று நகர்ந்து
கொண்டிருந்தார். இதோ! சதாஸிவம் பெரியவா முன்னால் தீர்த்தத்துக்காக கையை
நீட்டிவிட்டார்…….

பெரியவா உத்ரணியை பாத்திரத்துக்குள் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த
தேங்காயை எடுத்து தரையில் தட்டி உடைத்தார்……

“இன்னிக்கி ஒனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!” இளநீரை சதாசிவத்தின் கைகளில்
விட்டார்! சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம்! ரா.கணபதிக்கோ
நிம்மதி பெருமூச்சு!

“பாத்தியா? இன்னிக்கி பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷல்..லா தீர்த்தம்
குடுத்துட்டார்!…”

சாஸ்த்ரத்தையும் மீறாமல், பிறர் மனஸ் நோகாமல் தீர்வு காண தெய்வத்தால்
மட்டுமே முடியும்!

Saturday, May 25, 2013


ஒருமுறை சென்னையில் ஹிந்துமத மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் எல்லா மடத்தலைவர்களும் ஆதீனங்களும் கலந்து கொள்வதாய் ஏற்பாடு.முதல்நாள் அந்த மாநாட்டுக்கு மஹாஸ்வாமிகளை தலைமை தாங்கும்படி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.ஸ்வாமிகளும் சரி பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்.இதற்கிடையில் அன்று இரவு மற்ற மாடதிபதிகளும் ஆதீனங்களும் வேறுமாதிரி முடிவெடுத்தனர். அந்தமாநாட்டுக்க்கு ஸ்வாமிகளை தலைமைதாங்கவிடக்கூடாது என்று முடிவாகி ஒரு ஆதீனத்தை தலைமை தாங்க வைப்பது என்று முடிவெடுத்துவிட்டனர். இது விஷயம் ஸ்வாமிகள் காதுக்கு எட்டியது. பக்தர்கள் அந்த மாநாட்டுக்கு ஸ்வாமிகளைப் போகவேண்டாம் என்று தடுத்தனர்.ஆனால் ஸ்வாமிகளோ வாக்களித்தபடி போகத்தான் வேண்டும் கூறி மறுநாள் காலை மாநாட்டுக்கு கிளம்பிவிட்டார். பக்தர்கள் ஸ்வாமிகளுக்கு ஒன்றும் அபசாரம் நிகழ்ந்து விடக் கூடாதே என்று மனம் பதைபதைக்க அவருடன் சென்றனர்.
மாநாடு துவங்கியதும் முதல் பணி தலைவரை தேர்ந்தெடுப்பது. அமைப்பாளர் கூட்டத்தில் பங்கு கொள்ள வந்திருந்தவர்களைப் பார்த்து மாநாட்டு தலைவரை முன்மொழியச் சொன்னார். அரங்கத்தில் அமைதி குடிகொண்டது. ஒருவர் எழுந்து ………ஆதீனத்தின் பெயரை மாநாட்டுத் தலைவராக நான் முன் மொழிகிறேன் என்றார். உடனே கொஞ்சம் சலசலப்பு மாநாட்டின் பந்தலில்.ஆனால் அதை அடக்கும் வண்ணம் “‘நான் அதை ஆமோதிக்கிறேன்” என்று ஒரு மெல்லிய குரல் அவையிலிருந்து எழுந்தது. குரல் வந்த திசையை எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.ஆம் அது “‘தெய்வத்தின் குரல்தான்” மஹா பெரியவரே அதை ஆமோதித்து அந்த சிக்கலான விஷயத்தை லகுவாக சமாளித்து விட்டார் ,பட்டம் பதவி இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மஹான்.
ஒருமுறை சென்னையில் ஹிந்துமத மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் எல்லா மடத்தலைவர்களும் ஆதீனங்களும் கலந்து கொள்வதாய் ஏற்பாடு.முதல்நாள் அந்த மாநாட்டுக்கு மஹாஸ்வாமிகளை தலைமை தாங்கும்படி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.ஸ்வாமிகளும் சரி பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்.இதற்கிடையில் அன்று இரவு மற்ற மாடதிபதிகளும் ஆதீனங்களும் வேறுமாதிரி முடிவெடுத்தனர். அந்தமாநாட்டுக்க்கு ஸ்வாமிகளை தலைமைதாங்கவிடக்கூடாது என்று முடிவாகி ஒரு ஆதீனத்தை தலைமை தாங்க வைப்பது என்று முடிவெடுத்துவிட்டனர். இது விஷயம் ஸ்வாமிகள் காதுக்கு எட்டியது. பக்தர்கள் அந்த மாநாட்டுக்கு ஸ்வாமிகளைப் போகவேண்டாம் என்று தடுத்தனர்.ஆனால் ஸ்வாமிகளோ வாக்களித்தபடி போகத்தான் வேண்டும் கூறி மறுநாள் காலை மாநாட்டுக்கு கிளம்பிவிட்டார். பக்தர்கள் ஸ்வாமிகளுக்கு ஒன்றும் அபசாரம் நிகழ்ந்து விடக் கூடாதே என்று மனம் பதைபதைக்க அவருடன் சென்றனர்.
மாநாடு துவங்கியதும் முதல் பணி தலைவரை தேர்ந்தெடுப்பது. அமைப்பாளர் கூட்டத்தில் பங்கு கொள்ள வந்திருந்தவர்களைப் பார்த்து மாநாட்டு தலைவரை முன்மொழியச் சொன்னார். அரங்கத்தில் அமைதி குடிகொண்டது. ஒருவர் எழுந்து ………ஆதீனத்தின் பெயரை மாநாட்டுத் தலைவராக நான் முன் மொழிகிறேன் என்றார். உடனே கொஞ்சம் சலசலப்பு மாநாட்டின் பந்தலில்.ஆனால் அதை அடக்கும் வண்ணம் “‘நான் அதை ஆமோதிக்கிறேன்” என்று ஒரு மெல்லிய குரல் அவையிலிருந்து எழுந்தது. குரல் வந்த திசையை எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.ஆம் அது “‘தெய்வத்தின் குரல்தான்” மஹா பெரியவரே அதை ஆமோதித்து அந்த சிக்கலான விஷயத்தை லகுவாக சமாளித்து விட்டார் ,பட்டம் பதவி இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மஹான்.

Friday, May 24, 2013


‘என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாட்சியோட கருணை… எல்லாம்தான் காரணம்!’

மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்த மடத்தின் மூத்த ஊழியர்களில் ஒருவர் பாலு. மகா பெரியவர் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நடந்த சிலிர்ப்பான சில சம்பவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

”கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தபோது, தரையில் தடுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டுவிட்டதாம். அதிலிருந்து அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்தாள்.

அவளின் கண்பார்வையும் பறிபோனதாம். காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது என்றாலும், அவளின் பார்வை திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர் பிரஸ்னம் பார்க்கச் சொன்னாராம். அவரே நம்பூதிரி ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறார். பெண்ணின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த நம்பூதிரி, ‘கவலைப்படாதீங்க, கண்பார்வை கிடைச்சுடும். ஆனால், நீங்க க்ஷேத்திராடனம் செய்யணும். குருவாயூரில் துவங்கி, கும்பகோணம், திருவிடைமருதூர்னு புண்ணிய தலங்களுக்கெல்லாம் போயி வேண்டிக்கோங்க. முடிந்தால் அந்தத் தலங்களில் தீர்த்தமாடுறதும் விசேஷம்’னு சொல்லியிருக்கார்.

அதன்படியே க்ஷேத்திராடனம் கிளம்பிய அந்தப் பெண்மணி, வைத்தீஸ்வரன் கோயிலுக்கும் சென்றாளாம். அங்கே ஸ்வாமி சந்நிதியில், குருக்கள் தீபாராதனை முடிந்து தட்டை நீட்டிய தும், ஆரத்தி எடுத்துக்கொண்டவள், தட்டில் நூறு ரூபாய் தட்சணை வைத்தாளாம். குருக்களுக்கு ஆச்சரியம். இவளுக்குப் பார்வை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர், ‘அம்மா… இது பத்து ரூபாய் இல்ல; நூறு ரூபாய் நோட்டு’ என்று சொல்லியிருக்கிறார். இவளும், ‘பரவாயில்லை… எடுத்துக்கோங்க’ என்றாளாம். உடனே அந்தக் குருக்கள், ‘நீங்க பெரியவாளைப் பார்த்ததில்லையா?’ என்று கேட்டாராம். அவர் யாரைச் சொல்கிறார் என்று இந்தப் பெண்மணிக்குத் தெரியவில்லை. குருக்களிடமே விசாரித்திருக்கிறாள். ‘காஞ்சிபுரத்தில் இருக்காரே, சங்கர மடத்தில்… அவரை தரிசனம் செய்யுங்கோ’ என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருக்கள்.

இவளும் உடனே அங்கிருந்து புறப்பட்டு, சிதம்பரம் சென்றுவிட்டு, அப்படியே காஞ்சிபுரத்துக்கும் வந்தாளாம். அன்று, சென்னையில் ஒரு பிரமுகர் வீட்டில் உபநயனம். அவர்களுக்குப் பிரசாதம் எல்லாம் அனுப்பிவிட்டு, மடத்தில் அமர்ந்திருந்தார் பெரியவா. அந்த நேரம் அங்கே வந்த இந்தப் பெண்மணி, தான் கொண்டு வந்த பழங்களை அருகில் இருந்த நாற்காலியில் வைத்துவிட்டு, தனது நிலைமையை விவரித்தாள். வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்னபடி, காஞ்சி முனிவரைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத்தையும் கண்கலங்கச் சொன்னாள்.

உடனே அவளின் புருஷனைக் கூப்பிட்ட பெரியவா, ‘என்னைத் தெரியறதான்னு உங்க சம்சாரத்துக்கிட்டே கேளுங்க!’ என்றார். அத்துடன், அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து, தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரியவா.

அதே நேரம் அந்தப் பெண், ‘குருக்கள் சொன்ன சந்நியாஸி இதோ தெரிகிறாரே!’ என்றாளாம் சத்தமாக… பரவசம் பொங்க!

ஆமாம்… காஞ்சி தெய்வம் அவளுக்குக் கருணை புரிந்தது. ‘நம்பினார் கெடுவதில்லை… இது நான்கு மறைத் தீர்ப்பு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்! காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.

அவளுக்கு கண்பார்வை மீண்டும் கிடைக்க பிராப்தம் இருந்தது. அதற்கும் மேலாக தெய்வத்தின் மீதும், வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மகா பெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.

ஆனால் இது குறித்து மகா பெரியவாளிடம் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?

‘என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாட்சியோட கருணை… எல்லாம்தான் காரணம்!’ என்றார்” எனக் கண்கள் பனிக்க விவரித்த பாலு

Thursday, May 23, 2013


சுகமும் துக்கமும்

ஒரு முறை பரமாச்சாரியாரின் அருளாசி பெறுவதற்காக பரமாச்சாரியாரை வணங்கி நின்றிருந்தார் கவியரசர் கண்ணதாசன்.

அவரை குறும்போடு நோக்கிய பரமாச்சாரியார் "என்ன - ஏதேனும் சந்தேகம் வந்துடுத்தா ? என வினவினார்.

அதற்கு கவியரசர் "சுவாமி ஒன்று ஒரே சுகமாக இருக்க வேண்டும் - அல்லது கஷ்டமாக இருக்க வேண்டும். ஏன் மாறி மாறி வரவேண்டும் என கேட்டார் .

அதற்கு பரமாசாரியாரும் "ஒரே பிலோசொபியாக சொன்னால் உனக்கு போர் அடிக்கு ம். வேறு ஏதேனும் உவமை சொல்வதை விட்டு உன் லாஜிக்கில் சொல்வதென்றால், நீ எத்தனை ஆயிரம் வாட் லைட் போட்டு படம் எடுத்தாலும், அதன் அருமை டார்க் ரூமில் தான் தெரியும் . புரிந்ததா சுகமும் துக்கமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது அல்லது பிரிக்கமுடியாதது.

அடுத்த நிமிடம் தடால் என ஒரு சப்தம்.

அது கவியரசர் நமஸ்காரம் பண்ணியதால் ஏற்பட்டது.
சுகமும் துக்கமும்

ஒரு முறை பரமாச்சாரியாரின் அருளாசி பெறுவதற்காக பரமாச்சாரியாரை வணங்கி நின்றிருந்தார் கவியரசர் கண்ணதாசன். 

அவரை குறும்போடு நோக்கிய பரமாச்சாரியார் "என்ன - ஏதேனும் சந்தேகம் வந்துடுத்தா ? என வினவினார். 

அதற்கு கவியரசர் "சுவாமி ஒன்று ஒரே சுகமாக இருக்க வேண்டும் - அல்லது கஷ்டமாக இருக்க வேண்டும். ஏன் மாறி மாறி வரவேண்டும் என கேட்டார் . 

அதற்கு பரமாசாரியாரும் "ஒரே பிலோசொபியாக சொன்னால் உனக்கு போர் அடிக்கு ம். வேறு ஏதேனும் உவமை சொல்வதை விட்டு உன் லாஜிக்கில் சொல்வதென்றால், நீ எத்தனை ஆயிரம் வாட் லைட் போட்டு படம் எடுத்தாலும், அதன் அருமை டார்க் ரூமில் தான் தெரியும் . புரிந்ததா சுகமும் துக்கமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது அல்லது பிரிக்கமுடியாதது.

அடுத்த நிமிடம் தடால் என ஒரு சப்தம்.

அது கவியரசர் நமஸ்காரம் பண்ணியதால் ஏற்பட்டது.

பரமாச்சாரியார் காலத்தைக் கடந்தவர்!?

வைகாசி மாதம் உச்சிப் போது கத்ரி முடிந்தும் வெயில் உக்ரம் தணியவில்லை.

அப்போது லால்குடிக்கு அருகில், நீண்ட நாட்களுக்கு முன்பு ஸ்வாமிகள்முகாமிட்டிருந்த நேரம். தெருவில் நடமாட்டமே இல்லை.
பறவைகள் கூட ஒடுங்கி இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப் பறந்தன. தலைச் சுமை விற்பனையாளர்கள் வெயிலுக்குப் பயந்து ஒதுங்கி விட்டனர். கானல் நீர் தரைக்கு மேல் அழகாக அசைவது தெரிந்தது.

அத்தகைய வெயிலில், ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆசாரிய ஸ்வாமிகள் தெருவில் விறுவிறுவென்று நடந்து சென்ற அரிய காட்சியை வெகு சிலர் தான் பார்த்திருக்க முடியும் ! நிலவொளியில் நடப்பது போல் ஸ்வாமிகள் மட்டும் அந்தக் கடும் கோடையில், தன்னந் தனியாக பாதரட்சை அணிந்து, கையில் தண்டமுடன் வேகமாக நடந்து சென்றார். அவருடன் வேறு யாரும் வரவில்லை. ஸ்வாமிகள் மட்டும் அப்படிப் போவது வழக்கமில்லை; மிக அபூர்வம்!

பின்னால் பத்தடி தள்ளி நாதசுரக்காரர் கையில் நாதசுரத்துடன் ஓடோடியும் வந்தார். அவருக்குப் பின்னால் தவுல்காரர்; ஸ்வாமிகளுக்குக் குடை பிடிப்பதற்காக ஒருவர் பட்டுக் குடையுடன் ஓடோடி வந்தார். மடத்து சிப்பந்திகள் கையில் வெள்ளிப் பாத்திரங்களுடன் அரக்க பறக்க ஓடி வந்தனர். இவர்கள் எல்லோரும் வெகு வேகமாக ஓடி வந்து, ஸ்வாமிகளுக்கு முன்னால் சென்றனர். தீ மிதிப்பது போல் பதை பதைக்கிற அந்த வெயிலில் ஸ்வாமிகள் வேகமாக நடந்து போனதும், பின்னால் பரிவாரங்கள் ஓடிவந்து கலந்து கொண்டதுமான அந்த நிகழ்ச்சியை யாரோ ஓரிருவர் தான் கண்டிருக்க முடியும்.

அந்தக் காட்சியானது முதலையிடம் சிக்கிக்கொண்ட யானையரசன், 'ஆதிமூலமே' என்று கதறியவுடன், மறுகணமே ஸ்ரீமந்நாராயணன் வைகுண்டத்திலிருந்து தன் பரிவாரங்களெல்லாம் தொடர ஓடி வந்த மட்டற்ற காருண்யத்தை பார்த்தவர்களுக்கு நினைவூட்டியது.

ஸ்வாமிகளைத் தொடர்ந்து கடைசியாகச் சென்றவர்களிடம் விசாரித்த போது அவர் கூறிய விவரம்:

ஒரு பக்தர் வீட்டுக்கு 12 மணிக்கு ஸ்வாமிகள் பிக்ஷைக்கு வருவதாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். மடத்திலே பூஜைகள் எல்லாம் முடிவதற்கு 11 :30 மணி ஆகி விட்டது. தர்சனத்திற்கு வந்த மக்கள் கூட்டம் கலையவில்லை. அவர்களை சமாளிப்பதே பணியாளர்களுக்கு சரியாக இருந்தது. மணி 11 : 50 ஆகியும் மடத்தின் பணியாளர்கள் புறப்படுவதாகக் காணவில்லை. ஸ்வாமிகளுக்கோ பக்தனை காத்திருக்க வைக்க மனம் இல்லை. யாரையும் எதிர் பாராமல் அந்த அன்பர் வீட்டுக்கு தாமே புறப்பட்டு விட்டார்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்கு எதையும் செய்யத் தெரியாத அல்லது செய்யும் பழக்கமில்லாதவர்கள் நாம்! நேரத்தையும் காலத்தையும் கடந்த ஸ்வாமிகளோ, குறிப்பிட்ட தருணத்தில் தாம் ஏற்றுக் கொண்ட கடமையை ஆற்றுவதில் தீவிர கவனமுடையவர்கள் என்பது மட்டுமல்ல....

ஸ்வாமிகளைப் போன்ற யதீஸ்வரர்களுக்கு உரிய நேரத்தில் பிக்ஷாவந்தனம் செய்வது மிகப் பெரும் புண்ணியம். அதே சமயத்தில் காலந் தாழ்த்தி அவர்களுக்கு பிக்ஷாவந்தனம் செய்விப்பது பலமடங்கு பாவமாகும்.

தமது பக்தர், அந்த அபசாரத்துக்கு ஆளாக ஸ்வாமிகள் தாமே காரணமாக இருந்துவிடக் கூடாது என்று கருணையுடன் கருதி இருக்கலாம் அல்லவா ?

பரமாச்சாரியார் காலத்தைக் கடந்தவர்;
ஆனால் காருண்யத்தைக் கடந்தவர் அல்லவே
பரமாச்சாரியார் காலத்தைக் கடந்தவர்!?

வைகாசி மாதம் உச்சிப் போது கத்ரி முடிந்தும் வெயில் உக்ரம் தணியவில்லை.

அப்போது லால்குடிக்கு அருகில், நீண்ட நாட்களுக்கு முன்பு ஸ்வாமிகள்முகாமிட்டிருந்த நேரம். தெருவில் நடமாட்டமே இல்லை.
பறவைகள் கூட ஒடுங்கி இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப் பறந்தன. தலைச் சுமை விற்பனையாளர்கள் வெயிலுக்குப் பயந்து ஒதுங்கி விட்டனர். கானல் நீர் தரைக்கு மேல் அழகாக அசைவது தெரிந்தது.

அத்தகைய வெயிலில், ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆசாரிய ஸ்வாமிகள் தெருவில் விறுவிறுவென்று நடந்து சென்ற அரிய காட்சியை வெகு சிலர் தான் பார்த்திருக்க முடியும் ! நிலவொளியில் நடப்பது போல் ஸ்வாமிகள் மட்டும் அந்தக் கடும் கோடையில், தன்னந் தனியாக பாதரட்சை அணிந்து, கையில் தண்டமுடன் வேகமாக நடந்து சென்றார். அவருடன் வேறு யாரும் வரவில்லை. ஸ்வாமிகள் மட்டும் அப்படிப் போவது வழக்கமில்லை; மிக அபூர்வம்!

பின்னால் பத்தடி தள்ளி நாதசுரக்காரர் கையில் நாதசுரத்துடன் ஓடோடியும் வந்தார். அவருக்குப் பின்னால் தவுல்காரர்; ஸ்வாமிகளுக்குக் குடை பிடிப்பதற்காக ஒருவர் பட்டுக் குடையுடன் ஓடோடி வந்தார். மடத்து சிப்பந்திகள் கையில் வெள்ளிப் பாத்திரங்களுடன் அரக்க பறக்க ஓடி வந்தனர். இவர்கள் எல்லோரும் வெகு வேகமாக ஓடி வந்து, ஸ்வாமிகளுக்கு முன்னால் சென்றனர். தீ மிதிப்பது போல் பதை பதைக்கிற அந்த வெயிலில் ஸ்வாமிகள் வேகமாக நடந்து போனதும், பின்னால் பரிவாரங்கள் ஓடிவந்து கலந்து கொண்டதுமான அந்த நிகழ்ச்சியை யாரோ ஓரிருவர் தான் கண்டிருக்க முடியும்.

அந்தக் காட்சியானது முதலையிடம் சிக்கிக்கொண்ட யானையரசன், 'ஆதிமூலமே' என்று கதறியவுடன், மறுகணமே ஸ்ரீமந்நாராயணன் வைகுண்டத்திலிருந்து தன் பரிவாரங்களெல்லாம் தொடர ஓடி வந்த மட்டற்ற காருண்யத்தை பார்த்தவர்களுக்கு நினைவூட்டியது.

ஸ்வாமிகளைத் தொடர்ந்து கடைசியாகச் சென்றவர்களிடம் விசாரித்த போது அவர் கூறிய விவரம்:

ஒரு பக்தர் வீட்டுக்கு 12 மணிக்கு ஸ்வாமிகள் பிக்ஷைக்கு வருவதாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். மடத்திலே பூஜைகள் எல்லாம் முடிவதற்கு 11 :30 மணி ஆகி விட்டது. தர்சனத்திற்கு வந்த மக்கள் கூட்டம் கலையவில்லை. அவர்களை சமாளிப்பதே பணியாளர்களுக்கு சரியாக இருந்தது. மணி 11 : 50 ஆகியும் மடத்தின் பணியாளர்கள் புறப்படுவதாகக் காணவில்லை. ஸ்வாமிகளுக்கோ பக்தனை காத்திருக்க வைக்க மனம் இல்லை. யாரையும் எதிர் பாராமல் அந்த அன்பர் வீட்டுக்கு தாமே புறப்பட்டு விட்டார்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்கு எதையும் செய்யத் தெரியாத அல்லது செய்யும் பழக்கமில்லாதவர்கள் நாம்! நேரத்தையும் காலத்தையும் கடந்த ஸ்வாமிகளோ, குறிப்பிட்ட தருணத்தில் தாம் ஏற்றுக் கொண்ட கடமையை ஆற்றுவதில் தீவிர கவனமுடையவர்கள் என்பது மட்டுமல்ல....

ஸ்வாமிகளைப் போன்ற யதீஸ்வரர்களுக்கு உரிய நேரத்தில் பிக்ஷாவந்தனம் செய்வது மிகப் பெரும் புண்ணியம். அதே சமயத்தில் காலந் தாழ்த்தி அவர்களுக்கு பிக்ஷாவந்தனம் செய்விப்பது பலமடங்கு பாவமாகும்.

தமது பக்தர், அந்த அபசாரத்துக்கு ஆளாக ஸ்வாமிகள் தாமே காரணமாக இருந்துவிடக் கூடாது என்று கருணையுடன் கருதி இருக்கலாம் அல்லவா ?

பரமாச்சாரியார் காலத்தைக் கடந்தவர்;
ஆனால் காருண்யத்தைக் கடந்தவர் அல்லவே

Wednesday, May 22, 2013

மகாபெரியவாளின் மகிமை
எப்போ யாத்ரா போனாலும் பெரியவா வழியிலே இருக்கிற எதாவது சின்ன கிராமத்திலே தான் தங்குவா. குண்டக்கல் வழி போகும்போது ஒருதடவை ஹக்ரி என்கிற கிராமத்திலே தங்கினா. அந்த இடதிலேருந்து ஒரு 10 கிலோ மீட்டர் தூரத்திலே தான் ஒரு சிவன் கோவில் இருந்தது. கோவிலை ஒட்டி ஒரு பெரிய ஆறு வறண்டு போய் இருந்தது . கறையிலே ஒரு பிரம்மாண்ட ஆல மரம். ரம்யமாஇருந்த அந்த இடம் பெரியவாளுக்கு பிடிச்சுது. இங்கேயே தங்கலாம் என்று முடிவு எடுத்தா. அந்த ஊர் ஒரு பொட்டல் காடு. அங்கே ஆத்திலே தண்ணி இருந்த காலத்திலே கரும்பு விளைந்தது. அருகிலேயே ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. அந்த கம்பனி இழுத்து பறிச்சுண்டு இருந்தது. அதன் ஜெனரல் மேனேஜர் நம்மூர் ஆள். தஞ்ஜாவுர்காரர். பெரியவா வந்திருக்கா என்று தெரிந்ததும் மனிஷன் ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்.

“நான் வியாசபூஜா பண்ணலாம்னு நினைக்கிறன். கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா? ” என்று தெய்வம் அவரை கேட்டது.

ஜெனரல் மேனேஜர் ஆடி போயிட்டார். ” அபசாரம். இது நாங்கள் செஞ்ச புண்யம். கட்டளை இடுங்கோ. என்ன செய்யணுமோ ஏற்பாடு பண்றோம்” உடனே மூங்கில் கழிகள் தென்னை ஓலை எல்லாம் லாரி லாரியா வந்து இறங்கித்து. ஒரு ஆயிரம் பேர் கொள்ள பெரிய கொட்டகை தயார் ஆயிற்று. வேலை நடக்கும்போது இரவெல்லாம் பெரியவா தூங்கவே இல்லை. சிவன் கோயில் அழகும் ரம்யமான சூழ்நிலையும் மனதை கொள்ளை கொண்டாலும் வானம் பொய்த்து வருஷ கணக்கா பூமியும் ஆறும் வறண்டு கிடக்கிறதே என்று பெரியவாளின் மனம் உடைந்து போயிருந்தது.

ராத்திரி பூரா தூங்காம இருந்து மறுநாள் பெரியவா யாரோடும் பேசவில்லை. அவர் பார்வை பூரா அந்த வறண்ட ஆற்றின் மீது தான் இருந்தது. சாப்பிடவும் இல்லை. சாயந்திரம் திடீர் என்று எழுந்து அந்த வறண்ட ஆற்றின் நடுவே சுடும் மண்ணில் நின்றுகொண்டார். என்ன நினைத்தாரோ. ஆற்றின் கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மண்ணில் நடந்துவிட்டு திரும்பினார்.

அருகில் இருந்தவர்களிடம் ” நான் சந்தியா ஜபம் பண்ணபோறேன். யாரவது பார்க்க வந்தா நாளைக்கு வர சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டு ஜபம் தொடங்கினார். இருட்டி விட்டதால் எங்கிருந்தோ பெட்ரோமாக்ஸ் ஹரிக்கன் விளக்கெல்லாம் கொண்டு வைத்தார்கள்.

அன்று இரவு சுமார் 10 மணிக்கு சில்லென்று காற்று வீசியது. தொடர்ந்து ஒரு சில மழை துளிகள் விழுந்தது. பிறகு மெதுவாக மழை ஆரம்பித்தது. அதுவே பெரு மழையாக மாறியது. நான் ஓடிசென்று ஒரு சைக்கிள் ரிக்ஷாவை தள்ளிக்கொண்டு பெரியவா கிட்ட போய் நிறுத்தி அதில் அமரச்செய்தேன். ஒரு குடை கொண்டுவந்து பெரியவாளுக்கு தலைக்கு மேல் பிடித்துகொண்டு நின்றேன். விடிகாலை 1 . 30 வரை விடாது பெய்தது. ஆற்றில் நீர் ஓடியது. மறுநாள் காட்டு தீ போல செய்தி பரவி ஊர் மக்கள் அனைவரும் பெரியவாளுடைய மந்திர சக்தியை வியந்து அலைமோதினர். பெரியவாளும் பேசாமல் சந்தோஷத்தோடு வியாச பூஜா பண்ணி முடித்தார். அந்த வறண்ட ஊருக்கு மழைக்காகவே பெரியவா அங்கு தங்க முடிவெடுத்து வியாச பூஜா ஜபம் பண்ணி தன் தபஸ் மகிமையால் அதை நிறைவேற்றினார்.
பக்தி,குலதெய்வம் பற்றி மகா பெரியவா;

இந்திரா சௌந்தர்ராஜன் தீபம் இதழில்>>>

மகா பெரியவாளின் பக்தி விளக்கங்களைப் பார்த்து வருகிறோம். எது பக்தி என்பதில் தொடங்கி, அந்த பக்தியின் பலவித நிலைப்பாடுகளை துளியும் கருத்து பேதத்துக்கு இடமின்றி கூறிவரும் பெரியவர், ஆதிசங்கர பகவத் பாதர், எதை பக்தி என்று சொன்னார் என்பதையும் குறிப்பிடுகிறார்.

பகவத் பாதரின் சிவானந்த லஹரியில் எது பக்தி என்பதற்கான விளக்கத்தை நாமும் காணலாம். ஒருவரின் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்றால், அது ஐந்துவிதமாய் இருக்கலாமாம். ஒன்று அழிஞ்சில் விதை; அடுத்தது இரும்பு ஊசி; மூன்றாவது பதி விரதை; நான்கு, மரத்தைப் பற்றிக் கொள்ளும் கொடி; ஐந்தாவது ஓடும் நதி – என்று ஐந்து உதாரணங்களை பகவத் பாதர் அடுக்குகிறார்.

முதல் உதாரணம், அழிஞ்சில் விதை!

அழிஞ்சில் மரம் என்று ஒன்று உண்டு. இதன் விதைகள் மரத்தில் இருந்து உதிர்ந்து கீழே நிலத்தில் விழும். சில மணி நேரத்திலேயே மண்ணோடு மண்ணாக ஆகிவிடாமல், அந்த மரத்தின் அடிப்பாகத்தோடு சென்று ஒட்டிக்கொண்டு அப்படியே அதோடு கலந்துவிடுமாம். நம் பக்தி பாவமும் இறைவனோடு இப்படிக் கலந்துவிடும் விதமாக இருக்க வேண்டும்.

இரண்டாவது ஊசி. இந்த ஊசி, காந்தத்தை எங்கே கண்டாலும் போய் ஒட்டிக் கொண்டுவிடும். நாமும் இந்த ஊசிபோல இறைவனோடு ஒட்டிக் கொண்டுவிட வேண்டும். மூன்றாவது பதிவிரதை. இவளுக்கு, கணவன்தான் உலகம். கணவன்தான் கடவுள். இவனுக்கு மிஞ்சி எதுவுமே இவள் வரையில் கிடையாது. நான்காவது தாவரக் கொடி வகைகள். இந்தக் கொடி வகைகள் அழகாக அருகில் வளர்ந்திருக்கும் மரத்தைப் பற்றிக் கொண்டு மேலேறத் தொடங்கிவிடும். இது மரத்தைப் பற்றிக் கொள்வதைப் போல், நம் மனம் இறைவனைப் பற்றிக் கொண்டுவிட வேண்டும்.

ஐந்தாவது நதி. நதியின் சங்கமம் சமுத்திரத்தில்! நாமும் அதுபோல ஆண்டவனிடம் பக்தி கொண்டு அவனோடு சங்கமித்துவிட வேண்டும்.

இந்த ஐந்து உதாரணங்களிலும் ஓர் ஆச்சரியம் என்னவென்றால், அழிஞ்சில் விதையோ, இல்லை ஊசியோ, அதுவுமில்லை கொடியோ, நதியோ – யோசித்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற திராணியற்றவை இவை. யோசிக்கும் திராணி இருந்தும் பதிவிரதை ஆனவள், ‘நான் யோசிக்கத் தயாரில்லை; எனக்கு பதியே எல்லாம்’ என்பவள். ஆக, இங்கே இரு இயற்கையான இயல்புத் தன்மை இருப்பதைப் பார்க்கலாம்.

அழிஞ்சில் விதை, மரத்தோடு ஒட்டிக் கொள்வதன் பின்னே அதன் முனைப்பு அதிகம்; ஊசி காந்தத்தோடு கலப்பதில் காந்தத்தின் முனைப்பு அதிகம்; கொடி படர்வதில் கொடியின் முனைப்பு அதிகம்; நதி, கடலோடு கலப்பதில் நதியின் முனைப்பே அதிகம்.

பதிவிரதைக்கு வருவோம்.

இன்றைக்கு நமது சதிகள் சமத்துவம் பேசி, கணவனை பேர் சொல்லி அழைத்து ஒரு படி மேலே போய், ‘வாடா போடா’வென்று கூட அழைத்து உறவு கொண்டாடி வருகிறார்கள். காரணம், சமத்துவம் என்னும் எண்ணம்! இப்படி மனித புத்தி எண்ணும் என்பது ஆதிசங்கரருக்குத் தெரியாதா என்ன?

ஆனால், அப்படி சிலர் எண்ணினாலும், எண்ணாது பதிபக்தி காட்ட முடிந்த பெண்ணே, இங்கே அவர் வரையில் பக்திக்கு நல்ல உதாரணமாகப் படுகிறாள்.

சொல்லப்போனால், இந்த சதியே மிகச்சிறந்த உதாரணம். மற்றவை இயல்பான தன்மையால் நிகழ்பவை. ஆனால், சதியோ இந்த சமத்துவ சிந்தனை கடந்து, கணவனிடம் அழுக்குகள் தென்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாது, அவன்பால் பக்தி செலுத்த வேண்டும், அதுவும் இந்த நாளில்!

இது என்ன சாதாரண விஷயமா?

இப்படி ஐந்து விதமாய் பக்தி புரியலாம். புரிய வேண்டும் என்னும் பகவத் பாதரின் கருத்தை வழிமொழியும் நமது பெரியவர், இப்படி எல்லாம் பக்தி செலுத்த முடியாவிட்டால்கூட பாதகமில்லை.

பொன் வேண்டும் – பொருள் வேண்டும் என்று கேட்டுக்கூட பக்தியைத் தொடங்குங்கள். இது வியாபார பக்தி. பாதகமில்லை. ஒருநாள் இல்லை ஒருநாள், இந்த வியாபார பக்திக்குள்ளும் ஒரு தெளிவு கட்டாயமாக வரும். அப்போது வருத்தமும் வரும்.

அடடே! உலகையே எனக்குத் தந்த கடவுளிடம் அற்பமாய், ‘அது வேண்டும் இது வேண்டும்’ என்று கேட்டிருக்கிறேனே!

ஆற்றங்கரையோரமாக ஆற்றில் கால் நனைய நிற்கும் ஒருவன் தாகத்தில் தவிக்கத் தொடங்குகிறான். குனிந்து ஒருவாய் அள்ளிக் குடித்தால் தாகம் தீர்ந்து விடும். ஆனால் அதுகூட தெரியாமல், ‘நான் தாகத்தால் தவிக்கிறேன். எனக்குத் தண்ணீர் கொடு’ என்று கேட்கிறான். அவனைப் பார்த்து கடவுளுக்கு பரிதாபம் வருமா, கோபம் வருமா?

நாமும் கடவுள் நம்மைப் பார்த்து கோபப்படும் படியாகவே, அவன் அள்ளித் தந்ததை உணராமல், இனிதான் அவன் தரவேண்டும் என்பதுபோல, பக்தி செய்ததெல்லாம்கூட நிச்சயம் போகப் போக சரியாகிவிடும்.

பக்தியே செய்யாமல், அதை ஒரு பலவீனமான முட்டாள் தனமாக கருதிக் கொண்டு அகந்தையோடு இருப்பதைவிட வர்த்தக பக்தி, பேராசை பக்தி என்று பக்தி புரிவது தேவலாம்தான். ஏனென்றால், இது ஒருநாள் தெளிவாகி, அதுவே வேகம் தந்து, விட்டதற்கும் சேர்த்துப் பிடிப்பதற்கான ஒரு சக்தியைத் தந்துவிடும். ஆனால், பக்தி பற்றிய எண்ணமே இல்லாமல் அகந்தையோடு இருப்பது, மனிதப் பிறப்புக்கு ஆரோக்கியமான ஒன்றே அல்ல!

பக்திக்கு இப்படி நெடிய விளக்கத்தை பெரியவர் தந்துவிட்டாலும், என்னுள் கேள்விகளுக்குப் பஞ்சமில்லை. பிரதானமான ஒரு கேள்வி, இந்துமதத்தில் மட்டும் எதற்கு இத்தனை கடவுளர்கள் என்பதுதான்.

இதற்கு, பெரியவரின் பதில் அசாத்யமாக மிளிர்கிறது.

‘உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக, விஷயம் தெரிந்த எந்த ஹிந்துவும் எண்ணவில்லை. வைதிக மதம், ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை. இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமிதான் என்று வேறெந்த மதமும் கண்டுபிடிக்காததையும் கண்டுபிடித்திருக்கிறது. எனவே, பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகாசக்தியாக ஒரு ஸ்வாமிதான் இருக்கிறது என்பதில் விஷயமறிந்த எந்த ஹிந்துவுக்கும் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஸ்வாமி பல ரூபத்தில் வரமுடியும். அப்படிப்பட்ட யோக்யதையும் கருணையும் அதற்கு உண்டு என்று ஒரு ஹிந்து நம்புகிறான்.

ஒரே ஸ்வாமி, நம் தேசத்தின் மகாபுருஷர்களுக்குப் பல ரூபங்களில் தரிசனம் தந்திருக்கிறார். அந்த ரூபங்களுக்குரிய மந்திரம், உபாசனை மார்க்கம் எல்லாவற்றையும், இந்த மகாபுருஷர்கள் நமக்குத் தந்துள்ளனர். இவற்றை முறைப்படி அனுஷ்டித்தால் தான் நாம் அந்த தேவதையின் அனுக்ரகத்தைப் பெற முடியும்.

எந்த தேவதையாக இருந்தாலும் சரி, முடிவில் அது பரமாத்வாவே! தாயைப் போல பகவானைக் காண விரும்புகின்றவனுக்கு அம்பாள் உபாசனை. ஒரே சாந்தத்தில் அமுங்கிப் போக விரும்புகிறவனுக்கு தட்சிணாமூர்த்தி. ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செலுத்த கிருஷ்ண பரமாத்மா என்று வகுத்துள்ளோம்.

இதைத்தான் இஷ்டதேவதா வழிபாடு என்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன அமைப்பு. அந்த அமைப்புக்கு ஏற்ப, பக்தி செலுத்த உதவுவதுதான் இஷ்ட தேவதா வழிபாடு.

முதலில் நம் மனப்போக்குக்கு ஏற்ப, ஒரு தேவனிடமோ தேவியிடமோ பக்தி உண்டாகிறது. பிறகு, போகப்போக அது மாறி, ‘நமக்கென்று எதற்கு ஒரு மனப்போக்கு?’ என்று விட்டுவிட, அந்த தேவதையே அனுக்ரகம் செய்யும்.

இங்கே முக்கியமான ஒரு விஷயம், அவரவர் மனப்பாங்குக்கு ஏற்ப இஷ்ட தேவதா வழிபாடு செய்யும் போது, மற்றவர்களின் வழிபாட்டுத் தேவதையை தாழ்வாக எண்ணக் கூடாது.

இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. நம்மில் இரண்டு தெய்வங்கள் சண்டைபோட்டு, ஒன்றை ஒன்று ஜெயித்ததாக புராணத்தில் சம்பவங்கள் உண்டு.

இதை, சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு, ‘நஹிநிந்தா நியாயம்’ என்று பேர். ஒன்று பலமானது; இன்னொன்று அதைவிட பலம் குன்றியது என்பது இதன் உட்பொருளல்ல.

ஒரு தேவதையை உபாசிப்பவருக்கு, அந்த தேவதையிடம் தீவிரப் பற்று உருவாகிட இதுபோல பௌராணிகர்களால் சொல்லப்பட்டன. இதில் லோகத்தின் மானுட மாயா ரசக்கலப்பு உண்டு. ஒருவகையில் சிறுவர்கள் முன்னால் சில பெரியவர்கள் அவர்களை குஷிப்படுத்துவதற்காக சண்டை போட்டுக்கொண்டு கீழே விழுந்து கைகால்களை உதைத்து விட்டுக் கொள்வார்கள். குழந்தை அதைப் பார்த்து பெரிதாய் சிரித்து மகிழும். இது அந்த அளவிலான ஒரு மனோவியல் சார்ந்த விஷயம்!’ என்று பல தெய்வங்களுக்கான காரண காரியங்களை எளிதாகச் சொல்கிறார் பெரியவர்.

அடுத்து, இஷ்டதெய்வம் போலவே குலதெய்வ விஷயம்! இது நமது மதத்தில் ஒரு ஸ்பெஷாலிட்டியான மிக விசேஷமான விஷயம் என்கிறார் பெரியவர்.

இன்று குலதெய்வம் இல்லாத வீடு இல்லை.

இந்தக் குலதெய்வத்துக்குத் தான் முதல் மொட்டை, காதுகுத்தல்… அடுத்து எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும், குலதெய்வத்தை வேண்டித் தொடங்கும் ஒரு பழக்கவழக்கம்.

கல்யாணப் பத்திரிகையில்கூட குலதெய்வ நமஸ்காரமே முதலில்! அடுத்து, குருவின் துணை. ஒரு குல தெய்வமும், ஒரு குருவும் இல்லாமல் ஒரு ஹிந்துவின் வீடு இல்லை.

ஒன்று கருணைபுரிய, ஒன்று வழிகாட்ட! பிசகில்லாமல் நாமும் அதில் நடக்கும்போது, வாழ்விலும் ஒரு நிம்மதி இருக்கத்தான் செய்கிறது.

இதில் கோளாறு வரும்போதுதான், நம் வாழ்விலும் ஏற்ற இறக்கம் வந்து ஆட்டிப் பார்க்கிறது.

இந்த குலதெய்வ தாத்பர்யம் பற்றியும், குருவின் வழிகாட்டல் பற்றியும் பெரியவர் மூலமாகவே நாம் தெளிவு பெறுவோம்.

ஏனென்றால், அதில் தான் அவ்வளவு அர்த்தமும் அருளும் உள்ளது. அது…



நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

Saturday, May 4, 2013

எச்சில் தோஷம்

இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள காலஹஸ்தியை அறியாதவர்கள் இருக்க முடியாது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வாயு ஸ்தலமான இங்கு மலையடிவாரத்தில் ஈஸ்வரன் காலஹஸ்தீஸ்வரராக கோயில் கொண்டுள்ளார் சிலந்தி சர்ப்பம் யானை மூன்றும் இங்கு முக்தி பெற்றதால் இத்தலம் திருகாளஹஸ்தி என்று அழைக்க படுகின்றது .

இவ்வளவு சிறப்பு மிக்க காளஹஸ்திக்கு மகா பெரியவா ஒருமுறை சென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார் அவருடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று .

ஒருநாள் அந்த பக்தர் பூஜை அறையில் தனது பூஜையை முடித்துவிட்டு நெய்வேதியதுக்காக வைத்திருந்த கற்கண்டில் ஒரு பிடி எடுத்து வாயில் அள்ளி போட்டதுதான் தாமதம் வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டது வெளியே வந்து எட்டி பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார் வெளியே இருந்தது சாக்க்ஷாத் மகா பெரியவாள் .

வாய் நிறைய கற்கண்டை குதப்பிக் கொண்டிருந்ததால் அவரால் வாய் திறந்து பெரியவாளை வரவேற்க முடியவில்லை .பெரியவாளை பலமுறை வீட்டிற்கு வாருங்கள் என்று தாம் அழைத்தும் வீட்டின் முன்னே வந்து நிற்கும் அவரை வாருங்கள் வாருங்கள் என்று அழைக்க முடியவில்லையே என்ற தவிப்பில் தத்தளித்தார் .

அப்போது மகான் ’நான் வந்த நாள் முதல் ஆத்துக்கு வாங்கோன்னு நீ கூப்டாத நாளில்லை , இப்போ உங்காத்துக்கு வந்து வாசல்லையே நினுண்டிருக்கேன் உள்ள வாங்கன்னு சொல்லாம மச மசன்னு நிக்கறியே’ என்று கட்டளயிட்டார் 

பக்தருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பெரியவா அருகில் இருக்க வாயில் இருந்த கற்கண்டை கீழே உமிழ்ந்துவிட்டார் எங்கே தான் உமிழ்ந்த எச்சில் மகான் மீது பட்டிருக்குமோ என்று பதட்டமடைந்து அபசாரம் பண்ணிட்டேன் , அபசாரம் பண்ணிட்டேன் என்று கூறி வாயில் போட்டுகொண்டார் .

இதை புரிந்துகொண்ட மகான் இப்ப என்ன அயிடுத்து ஏன் பதற்றம் ? இக்காலஹஸ்தியில் கண்ணப்பநாயனார் சிவபெருமானுக்கு எப்படி பூஜை பண்ணினான்னு தெரியுமா வாயில் ஜலத்தைக் கொண்டுவந்து சிவ லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான் , மாமிசத்தை வாயில் சுவைத்து நெய்வேத்தியம் பண்ணினான் அவன் செய்த செயல் நமக்கு தவறாக தோன்றினாலும் பகவானுக்கு அது தவறாக தெரியவில்லை .
ஆசார்யாள் (ஆதிசங்கரர்) சிவானந்த லஹரியில் ஆனானபட்டவன் பூஜையெல்லாம் பாராட்டாமல் காட்டில் வாழ்ந்த கண்ணப்பன் பக்தியைத்தான் பெரிசா சொல்லறார் . அப்பேற்பட்ட கண்ணப்பன் வாழ்ந்த திருத்தலம் இது இங்க நமக்கு எச்சில் தோஷம் வராது என்றார் மகா பெரியவா 

இதற்கு பிறகுதான் அந்த பக்தன் சமாதானம் அடைந்தார்
எச்சில் தோஷம்

இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள காலஹஸ்தியை அறியாதவர்கள் இருக்க முடியாது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வாயு ஸ்தலமான இங்கு மலையடிவாரத்தில் ஈஸ்வரன் காலஹஸ்தீஸ்வரராக கோயில் கொண்டுள்ளார் சிலந்தி சர்ப்பம் யானை மூன்றும் இங்கு முக்தி பெற்றதால் இத்தலம் திருகாளஹஸ்தி என்று அழைக்க படுகின்றது .

இவ்வளவு சிறப்பு மிக்க காளஹஸ்திக்கு மகா பெரியவா ஒருமுறை சென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார் அவருடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று .

ஒருநாள் அந்த பக்தர் பூஜை அறையில் தனது பூஜையை முடித்துவிட்டு நெய்வேதியதுக்காக வைத்திருந்த கற்கண்டில் ஒரு பிடி எடுத்து வாயில் அள்ளி போட்டதுதான் தாமதம் வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டது வெளியே வந்து எட்டி பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார் வெளியே இருந்தது சாக்க்ஷாத் மகா பெரியவாள் .

வாய் நிறைய கற்கண்டை குதப்பிக் கொண்டிருந்ததால் அவரால் வாய் திறந்து பெரியவாளை வரவேற்க முடியவில்லை .பெரியவாளை பலமுறை வீட்டிற்கு வாருங்கள் என்று தாம் அழைத்தும் வீட்டின் முன்னே வந்து நிற்கும் அவரை வாருங்கள் வாருங்கள் என்று அழைக்க முடியவில்லையே என்ற தவிப்பில் தத்தளித்தார் .

அப்போது மகான் ’நான் வந்த நாள் முதல் ஆத்துக்கு வாங்கோன்னு நீ கூப்டாத நாளில்லை , இப்போ உங்காத்துக்கு வந்து வாசல்லையே நினுண்டிருக்கேன் உள்ள வாங்கன்னு சொல்லாம மச மசன்னு நிக்கறியே’ என்று கட்டளயிட்டார் 

பக்தருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பெரியவா அருகில் இருக்க வாயில் இருந்த கற்கண்டை கீழே உமிழ்ந்துவிட்டார் எங்கே தான் உமிழ்ந்த எச்சில் மகான் மீது பட்டிருக்குமோ என்று பதட்டமடைந்து அபசாரம் பண்ணிட்டேன் , அபசாரம் பண்ணிட்டேன் என்று கூறி வாயில் போட்டுகொண்டார் .

இதை புரிந்துகொண்ட மகான் இப்ப என்ன அயிடுத்து ஏன் பதற்றம் ? இக்காலஹஸ்தியில் கண்ணப்பநாயனார் சிவபெருமானுக்கு எப்படி பூஜை பண்ணினான்னு தெரியுமா வாயில் ஜலத்தைக் கொண்டுவந்து சிவ லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான் , மாமிசத்தை வாயில் சுவைத்து நெய்வேத்தியம் பண்ணினான் அவன் செய்த செயல் நமக்கு தவறாக தோன்றினாலும் பகவானுக்கு அது தவறாக தெரியவில்லை .
ஆசார்யாள் (ஆதிசங்கரர்) சிவானந்த லஹரியில் ஆனானபட்டவன் பூஜையெல்லாம் பாராட்டாமல் காட்டில் வாழ்ந்த கண்ணப்பன் பக்தியைத்தான் பெரிசா சொல்லறார் . அப்பேற்பட்ட கண்ணப்பன் வாழ்ந்த திருத்தலம் இது இங்க நமக்கு எச்சில் தோஷம் வராது என்றார் மகா பெரியவா 

இதற்கு பிறகுதான் அந்த பக்தன் சமாதானம் அடைந்தார்