சுகமும் துக்கமும்
ஒரு முறை பரமாச்சாரியாரின் அருளாசி பெறுவதற்காக பரமாச்சாரியாரை வணங்கி நின்றிருந்தார் கவியரசர் கண்ணதாசன்.
அவரை குறும்போடு நோக்கிய பரமாச்சாரியார் "என்ன - ஏதேனும் சந்தேகம் வந்துடுத்தா ? என வினவினார்.
அதற்கு கவியரசர் "சுவாமி ஒன்று ஒரே சுகமாக இருக்க வேண்டும் - அல்லது கஷ்டமாக இருக்க வேண்டும். ஏன் மாறி மாறி வரவேண்டும் என கேட்டார் .
அதற்கு பரமாசாரியாரும் "ஒரே பிலோசொபியாக சொன்னால் உனக்கு போர் அடிக்கு ம். வேறு ஏதேனும் உவமை சொல்வதை விட்டு உன் லாஜிக்கில் சொல்வதென்றால், நீ எத்தனை ஆயிரம் வாட் லைட் போட்டு படம் எடுத்தாலும், அதன் அருமை டார்க் ரூமில் தான் தெரியும் . புரிந்ததா சுகமும் துக்கமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது அல்லது பிரிக்கமுடியாதது.
அடுத்த நிமிடம் தடால் என ஒரு சப்தம்.
அது கவியரசர் நமஸ்காரம் பண்ணியதால் ஏற்பட்டது.
No comments:
Post a Comment